Economy

PF பணம் கிடைக்காது? உடனே இந்த வேலைய முடிங்க!

பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் இந்த வேலையை முடிக்காவிட்டால் குடும்ப உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்காமல் போகலாம்.

வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) அமைப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று இ-நாமினேசன். பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் இந்த வேலையை முடித்தாக வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர் தனது கணக்கில் நாமினி பெயரை இணைத்தால்தான் அவரது இறப்புக்குப் பிறகு பிஎஃப் பலன்களைப் பெறமுடியும்.

ஒரு பிஎஃப் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி பெயரை இணைக்கும் வசதியும் உள்ளது. அவர்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். இ-நாமினேசன் வேலையை முடிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் இ-நாமினேசன் வேலையை முடிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்த பிறகும் ஆன்லைன் மூலமாக நாமினேசன் செய்ய முடியும்.

இந்த இ-நாமினேசன் பிராசஸை முடிப்பது ஈசியான வேலைதான். ஆன்லைன் மூலமாகவே இதைச் செய்ய முடியும். epfindia.gov.in வெப்சைட்டில் சென்று ’for Service’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘Member UAN/Online Service’ என்ற ஆப்சனில் சென்று உங்களுடைய பிஎஃப் நம்பர் பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு மேனேஜ் டேபில் உள்ள ‘e-nomination’ என்ற வசதியில் சென்று உங்களுடைய விவரங்களை வழங்க வேண்டியிருக்கும். அதை சேவ் செய்யவும் முடியும்.